இறுதி மூச்சு

அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்லாஹ் படைத்த அனைத்துமே ஒரு நாள் மடியும், முடியும். மனிதன் மட்டும் விலக்கல்ல. ஆனால் மனிதனின் மரணம் முடிவல்ல, தொடர்கதையின் அடுத்த பகுதிக்கான நுழைவாயில் அது. மரணத்திற்கு முன் வாழ்ந்த வாழ்வை பரீசீலித்து கூலிகள் வழங்கப் படுவதே அடுத்த பகுதி. நாம் எல்லோரும் அதை உணர்ந்துள்ளோமா, அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டுள்ளோமா என்பதே கேள்வி. இங்கு கீழே பதியப்பட்டிருக்கும் பாடலும் அதைப் பற்றியே…

காலம் தாழ்த்தாதீர்கள் சகோதர சகோதரிகளே…

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதர சகோதரிகளே,
நம்மில் நிறைய பேருக்கு, அல்லாஹ் நமக்கு தந்துள்ள அருட்கொடைகளைப் பற்றிய நினைவோ, அதற்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதில்லை. அதிகம் பேரிடம், இது நம்முடைய கடின உழைப்பால் கிட்டியது என்ற எண்ணமே மேலோங்கி உள்ளது. சற்றே ஒரு நொடி நினைத்துப் பாருங்கள். அல்லாஹ் நினைத்தால் இந்த அருட்கொடைகளை ஒரு நொடியில் நம்மிடமிருந்து அகற்றிட முடியும். அந்நிலை ஏற்பட்டால்?
கீழே பதியப்பட்டிருக்கும் படம் இது போல வாழ்ந்த ஒரு மனிதருடையது. தற்போது [...]