ஆலந்தூரில் “அல் அகீதத்துல் ஸஹீஹா” பாட வகுப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு,

ஆலந்தூரில் உள்ள மஸ்ஜிது அஹ்லே ஹதீஸில் ஷேக் இப்னு பாஜ் அவர்களின் புத்தகமான “அல் அகீதத்துல் ஸஹீஹா” வின் மேல் வகுப்புகள் நடை பெற இருக்கின்றது. முதலில் நாம் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் நாடாமல் எவருக்கும் இந்த தீனைப் பற்றிய அறிவு கிட்டுவதில்லை. அல்லாஹ் நாடியவாறே ஒருவருக்கு இஸ்லாத்தின் அறிவு கிட்டுகின்றது. அந்த அறிஞரை நாம் மதிப்புடன் அணுக கற்றுக் கொள்ள வேண்டும். அவர் வஹ்ஹாபி, இவர் சூஃபீ, அவர் ஸலாஃபீ, என்றெல்லாம் வரையறைகள் போட்டு, அடையாளங்கள் இட்டு, அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அந்தஸ்த்தை சிறுமைப் படுத்த விழையக் கூடாது. இன்னும் ஒரு எடுத்துக்காட்டு என்னவென்றால், இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் கிட்டத்தட்ட 150 இஸ்லாமிய அறிஞர்களிடம் பாடம் பயின்றார்கள். அவர்களில் ஒரு சூஃபீ அறிஞரும் அடக்கம். இமாம் அபூ ஹனீஃபா, நான் சூஃபீ அறிஞரிடம் எல்லாம் பாடம் பயில மாட்டேன் என்று தன்னை விலக்கிக் கொண்டாரா? அல்லவே? அறிவெனும் ஊற்று எங்கிருந்தாலும் இஸ்லாமிய அறிவைத் தேடும் ஒரு மாணாக்கன், அதனை அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அது ஆதாரபூர்வமானதா என்று பார்த்தால் மட்டும் போதுமானது, அந்த ஆசிரியரின் அகீதாவை எடை போட்டுப் பார்க்க விழையக் கூடாது. மேலும், அறிவு கிட்டிய பின் நாம் அதனை எவ்வாறு உபயோகப் படுத்துகின்றோம் என்பதே முக்கியமாகும். இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் சூஃபீ அறிஞரிடம் பாடம் கற்றதால் சூஃபீ ஆகிவிடவில்லை. அந்த அறிவை தேவைப் பட்ட இடத்தில் உபயோகப் படுத்தினார். அது போலவே நாமும் செயல் பட வேண்டும். ஃகைர். விடையம் இதுதான். இந்த பாடத்தை பயில, ஆலந்தூர் வரை செல்ல வசதியிருப்பின் இன்ஷா அல்லாஹ் பாடத்தை கற்கவும். நீங்கள் தப்லீக் ஜமா’அத்தாக இருந்தாலும் சரி அல்லது ஸலஃபீ ஜமா’அத்தாக இருந்தாலும் சரி. பாடத்தை பயிலுங்கள். அதன் பின் அந்த அறிவை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்று முடிவெடுங்கள். அல்லாஹ் நமக்கு நேர்வழியில் நிலை பெற உதவிடுவானாக. ஆமீன். இந்த பாடத்தை பற்றிய மேல் விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் அல்லது கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும். வஸ்ஸலாம்.

Leave a Reply

You must be logged in to post a comment.