“அப்பா, ஆமீன் என்று கூறுங்கள்”
இல் பதிவுசெய்யப்பட்டுள்ளது ஏப்ரல் 16, 2008 ஆல் A Yunus
ரியாதில் உள்ள ஒரு உலெமா தெரிவித்தது:
ஒரு தடவை ரியாதில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டுக் கொண்டிருநதோம். அப்பொழுது, ஒரு அறையில், ஒரு வயதான மனிதரும் அவரின் 40 வயது மகளும் இருந்தனர். அவரின் மகளுக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அவளுக்கென வந்த ஒவ்வொரு வரனையும் அவ்ளின் தந்தை தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். அந்த உலெமா கூறினார், ” அந்த மனிதர் மிகப் பேராசை கொண்டவராக இருந்தார். உலகத்திம் மீது தீராத மோகம் கொண்டவராக இருந்த்தார். ஆனால் அவரின் உலக ஆசை அவருக்கு பயனளிக்க வில்லை. அவரிடம் அளவற்ற செல்வமும், கார்களும், நிலங்களும் இருந்தன. எனவே அவரின் மகளை கல்யாணம் செய்ய முன் வருபவர் செல்வத்தின் அதிபதியாகவும், கணக்கு வழக்கற்ற அளவில் செல்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத நிபந்தனையாக இருந்தது. எந்த ஒரு வரன் வந்தாலும் அவனிடத்தில் முதலில் அவனின் சம்பளத்தைப் பற்றியும், அவனிடம் இருக்கும் வாகன எண்ணிக்கையைப் பற்றியும், சொந்தமாய் எத்தனை பெரிய வீடு உள்ளது என்பதுவுமே கேள்வியாய் இருந்தது. என்வே நல்ல்தொரு முஸ்லிமாய் வாழும் எந்த இளைஞனுக்கும் வாய்ப்பு கிட்டாமல் தோல்வியிலேயே முடிந்தது. இப்படியே காலங்கள் செல்ல செல்ல அவரின் மகளுக்கு தீராத ஓர் வியாதி வந்து அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாள். நாங்கள் அவளைக் காணும் வேளையில் அவள் மலக்குல் மௌத்தைக் காணும் நெருங்கிய தூரத்தில் இருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் அவள் அல்லாஹ்வை, வல்ல நாயனை, நீதியின் அதிபதியை காணப் போகின்ற ஏற்பாடுகளில் இருந்தாள்.”
சில வினாடிகளுக்கு பிறகு அவள் தன் தந்தையை அழைத்தாள்,” அப்பா…அருகில் வாருங்கள்!”
அவளின் தந்தை இப்போது அவளின் அருகில் இருந்தார்.
அவள்: “அப்பா, ஆமீன் என்று கூறுங்கள்”
அப்பா: ” ஆமீன்”
அவள்: “அப்பா, மீண்டும் ஆமீன் என்று கூறுங்கள்”
அப்பா: “ஆமீன்”
அவள்: “மூன்று தடவை ஆமீன் என்று கூறுங்கள் அப்பா…”
அதன் பின் கூறினாள், ” எப்படி நீங்கள் எனக்கு திருமண வாழ்வை எட்டா கனியாக்கி அதன் இன்பத்தை எனக்கு தடை செய்தீர்களோ அது போல எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு சுவனத்தை தடை செய்யட்டும்”
(அல்லாஹ்வின் மீது ஆணையாக, இது உண்மையில் அவ்விடத்தில் இருந்து அச் சம்பவத்தை நேரில் கண்ட ஒரு ஷேக் / உலெமா கூறியதே இது)
40 வருடங்களாக அவள் தன் தந்தைக்கு அடி பணிந்து அவரின் வீட்டிலேயே, அவரின் சொல் தட்டாமல் வாழ்ந்ததற்கு அவளின் தந்தை யோசித்திருக்க வேண்டாமா? காலம் கடந்த ஞானோதயம் வந்து ஒன்றும் பிரயோஜனமில்லை.
:மூலம்:
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது படித்ததில் பிடித்தத | குறிச்சொல்லிடப்பட்டது: ஆமீன், இஸ்லாத்தில் திருமணம, தந்தை, திருமணத் தடை, திருமணம், துஆ, மகள், மருத்துவமனை, ரியாத்